Wednesday, June 3, 2020

மனிதம் எங்கே போகிறது???

ஆம்...மனிதம் எங்கே போகிறது?? மனிதனிடம் மனிதம் இல்லை..

இன்று இணையத்தில் கண்ட இந்த படம் என்னை மிகவும் பாதித்து விட்டது.. 

சாப்பிட அன்னாசிப்பழம் தந்திருக்கிறான் மனிதன் என்று தாய் யானை பிள்ளையிடம் சொல்ல மனிதன் எவ்வளவு நல்லவன் என்று பிறவாக்குழந்தை பேரானந்த படுவதாக சித்தரிக்கப்பட்ட படம்...

ஆனால் உண்மையில் என்ன நடந்தது.. இந்த வாயில்லா மிருகங்களை கொல்ல எப்படி மனது வந்தது இந்த கொடிய மனிதனுக்கு..  

அந்த பட்டாசு வெடித்து புண்ணாய் போன வாய் எப்படி வலித்திருக்கும்? அந்த கடைசி நிமிடத்தில் அந்த பிறவாக்குழந்தையை நினைத்து எவ்வளவு துடித்திருக்கும்? மனிதனின் நம்பிக்கை துரோகம் எத்தனை ரணம் தந்திருக்கும்?


சமீபக்காலமாகவே நாய்களுக்கு பாலூட்டும் ஆடு, மின்கம்பியில் தாவத்தெரியாமல் தத்தளித்த குட்டி குரங்கினை காப்பாற்றும் தாய் குரங்கு, கிளியோடு விளையாடும் பூனை இப்படியாக எத்தனையோ வீடியோக்களை கண்டு மகிழுந்த மனதில் இன்றைய இந்த கேரளத்தில் நடந்த சம்பவம் மனதை சிதைத்து போடுகிறது...

எங்கே போகிறது மனிதம்??
யார் காரணம் இன்றைய நிலைக்கு??
படிக்காத ஐந்தறிவு  மிருகங்களை காட்டிலும் படித்த ஆறறிவு மனிதர்கள் மிருகமாக மாறி நிற்கிறார்கள்.. படிப்பு பகுத்தறிவை உண்டாக்குகிறதா அல்லது வேர் அறுத்துப்போடுகிறதா???

இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதை காட்டிலும், இல்லாமல் போவதே மேல்... 

No comments: