Tuesday, February 22, 2011

நட்பின் போராட்டம்



தென்றலென மிக மிருதுவாய் வாழ்வினில் வந்தாய்...
மறந்த சந்தோஷங்கள் அனைத்தும் மறவாமல் தந்தாய்....
காலமாற்றத்தில் சூழ்நிலை கைதியானாய்...

நீ சிறைக்குள் செல்கையில்
புயலென மாறி உன்னுடனேயே என்
அனைத்து சந்தோஷங்களையும்
வேறோடு எடுத்து சென்றதும் ஏனோ????

மீண்டும் நீ மீண்டு நம் சந்தோஷங்களுக்கு
உயிர் கொடுக்கப்போவது என்றோ???
புரிதலுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் நான்...