Friday, November 5, 2010

நாம் இருவர்...


நீயென்றும்
நானென்றுமாகயிருந்த
நாம்..
நாமாகயிருந்த
நாட்கள் மாறி
நீயும்
நானுமாகவே
நிற்கிறோம் மீண்டும்....

Wednesday, March 31, 2010

நெற்றி வியர்வை...


அன்று உன்னால்
துடைக்கப்பெற்ற
வியர்வைத்துளிகளின்
ஆனந்ததினைக் கண்ட
என் நெற்றி.....
ஒவ்வொரு முறை
வியர்க்கும் பொழுதும்
உன் கைகளையே
எதிர்ப்பார்க்கின்றன்...

Saturday, March 27, 2010

உயிரில் உறைந்த உறவு...


உறவென்று சொல்லி
உயிரோடும் உணர்வோடும்
உறைந்துவிட்ட
உன்னதமானவன் நீ...

Friday, March 26, 2010

உறவா...உயிரா...



உறவென்று சொல்லி
என்னருகில் உனையமர்த்த
மனமில்லை...
உயிரென்று சொல்லி
எனக்குள்ளே உனை
சுமக்கவே ஆசைப்படுகிறேன்...

உன்னில் நான்....






உனது உலகத்தில்
நீலவானமாக அல்ல
ஏழுவண்ண வானவில்லாக
வாழவே ஆசைப்படுகிறேன்....
மிகக்குறைந்த நேரத்தில்
எத்தனை புத்துணர்ச்சி....




Thursday, March 25, 2010

தடுமாறினேன் நான்...



தடுமாறிய என்னை நீ
தாங்கி பிடித்த
தருணத்தின் இனிமையினை
திரும்ப பெறவே மீண்டும்
தடுமாறினேன் நான்
தன்னிலை மறந்து...

Thursday, February 25, 2010

தேனாக மாறிய மழைத்துளி...


மலர் தேடி வந்த வண்டல்ல நீ
என்னுளிருந்து தேனெடுக்காமல்
எனக்குள் தேனூற்றி சென்றாயே...
நீ ரீங்காரமிடும் வண்டல்ல
என்னுள் கலந்து எனக்குள்
தேனாக மாறிய தூய்மையான
மழைத்துளி...

Saturday, February 20, 2010

காதலின் தூய்மை...


உனக்குமெனக்குமான காதல்
தரைத்தொடா மழைநீர் போன்றது...

தனிமை...


மனதில்
இனிமையும் தெளிவும்
தனிமையில் மட்டுமே
பிறக்கிறது.....

Saturday, February 13, 2010

காத்திருந்த காதல்...


உனக்கான காத்திருப்பில்
உணர்ந்தேன் என்மீதான
உன் காதலை....