Thursday, June 4, 2020

மீண்டும் அம்மா..


அம்மா..
ஆம்.. இன்னும் ஓரே நாள் தான்
உங்களின் ஓராண்டு நினைவு நாளுக்கு
போன வருடம் இதே நாளில்
உங்களின் கடைசி யாத்திரைக்காக
தயாராகிக் கொண்டிருந்தீர்கள்..
எங்களைப் பற்றி யோசித்திருப்பீர்கள்
எங்களை, நீங்கள் இல்லா வாழ்விற்காக 
தயார் செய்துவிட்டதாய்
எண்ணியிருப்பீர்கள்
ஆனால் அம்மா 
நீங்கள் இவ்வுலகை விட்டு 
சென்ற நாள் முதல் 
இன்று வரை உங்களின் நினைவில்
கண்ணீர் விடாத நாள் இல்லவே இல்லை
என் சுகமும் துக்கமும் இன்றுக்கூட
உங்களிடம் மட்டுமே பகிரப்படுகிறது..
நீங்கள் உடலளவில் எங்களோடு இல்லை
ஆனால் மனம் முழுவதும் உங்களின்
நினைவு மட்டுமே..

அம்மா.. 
முன்பெல்லாம் சாவு என்றால் பயமெனக்கு
ஆனால் இப்போது அந்த பயமில்லை
சொல்லப்போனால் சாவிற்காக காத்து நிற்கிறேன்
மீண்டும் உங்களை பார்ப்பேன் என்பதால்..

மிஸ் யூ அம்மா.. லவ் யு லாட்ட்ட்ட்ட்ட்

Wednesday, June 3, 2020

மனிதம் எங்கே போகிறது???

ஆம்...மனிதம் எங்கே போகிறது?? மனிதனிடம் மனிதம் இல்லை..

இன்று இணையத்தில் கண்ட இந்த படம் என்னை மிகவும் பாதித்து விட்டது.. 

சாப்பிட அன்னாசிப்பழம் தந்திருக்கிறான் மனிதன் என்று தாய் யானை பிள்ளையிடம் சொல்ல மனிதன் எவ்வளவு நல்லவன் என்று பிறவாக்குழந்தை பேரானந்த படுவதாக சித்தரிக்கப்பட்ட படம்...

ஆனால் உண்மையில் என்ன நடந்தது.. இந்த வாயில்லா மிருகங்களை கொல்ல எப்படி மனது வந்தது இந்த கொடிய மனிதனுக்கு..  

அந்த பட்டாசு வெடித்து புண்ணாய் போன வாய் எப்படி வலித்திருக்கும்? அந்த கடைசி நிமிடத்தில் அந்த பிறவாக்குழந்தையை நினைத்து எவ்வளவு துடித்திருக்கும்? மனிதனின் நம்பிக்கை துரோகம் எத்தனை ரணம் தந்திருக்கும்?


சமீபக்காலமாகவே நாய்களுக்கு பாலூட்டும் ஆடு, மின்கம்பியில் தாவத்தெரியாமல் தத்தளித்த குட்டி குரங்கினை காப்பாற்றும் தாய் குரங்கு, கிளியோடு விளையாடும் பூனை இப்படியாக எத்தனையோ வீடியோக்களை கண்டு மகிழுந்த மனதில் இன்றைய இந்த கேரளத்தில் நடந்த சம்பவம் மனதை சிதைத்து போடுகிறது...

எங்கே போகிறது மனிதம்??
யார் காரணம் இன்றைய நிலைக்கு??
படிக்காத ஐந்தறிவு  மிருகங்களை காட்டிலும் படித்த ஆறறிவு மனிதர்கள் மிருகமாக மாறி நிற்கிறார்கள்.. படிப்பு பகுத்தறிவை உண்டாக்குகிறதா அல்லது வேர் அறுத்துப்போடுகிறதா???

இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதை காட்டிலும், இல்லாமல் போவதே மேல்...