Thursday, February 25, 2010

தேனாக மாறிய மழைத்துளி...


மலர் தேடி வந்த வண்டல்ல நீ
என்னுளிருந்து தேனெடுக்காமல்
எனக்குள் தேனூற்றி சென்றாயே...
நீ ரீங்காரமிடும் வண்டல்ல
என்னுள் கலந்து எனக்குள்
தேனாக மாறிய தூய்மையான
மழைத்துளி...

Saturday, February 20, 2010

காதலின் தூய்மை...


உனக்குமெனக்குமான காதல்
தரைத்தொடா மழைநீர் போன்றது...

தனிமை...


மனதில்
இனிமையும் தெளிவும்
தனிமையில் மட்டுமே
பிறக்கிறது.....

Saturday, February 13, 2010

காத்திருந்த காதல்...


உனக்கான காத்திருப்பில்
உணர்ந்தேன் என்மீதான
உன் காதலை....