உன்னைப்பற்றிய நினைவுகளால்
மட்டும்!!
பனிக்காற்றின் குளிர்ச்சியில்
இளங்காலை வெப்பத்தில்
வானொலியின் காதல் பாடலில்
அவசரச் சமையலில்
மின்னஞ்சல் வாசிக்கையில்
குறுந்தகவல் சத்தத்தில்
மதிய உணவு நேரத்தில்
பணிமுடித்துக் கிளம்புகையில்
பேருந்து பயணத்தில்
நட்சத்திரங்களை,நிலவை,வானை ரசிக்கையில்
போர்வையின் மென்மையில்
என் கனவில்
என
மறக்க நினைத்தும்
முடியாமல்
என் வாழ்வின்
எல்லாக் கணங்களிலும்
உன்னையே யோசித்தபடி இருக்கையில்
உன் நினைவகற்றி வாழ
ஒரு மணித்துளிக்கூட
முடிவதில்லையே என்னுயிரே...