Tuesday, June 12, 2012

காத்திருப்பின் எல்லை...





உனக்கான காத்திருப்புகள்

எந்த ஒரு எல்லைகளுமேயற்றிருந்தன...

நீ மீண்டும் என்னோடிணையும்

நாளுக்காய் நித்தமும் தேடலுடனேயிருந்தேன்..


நாட்கள் கடந்து மாதங்கள் கடந்தன

இந்நாட்களில் எனக்கிருந்த வலிகள்

என் தலையணை மட்டுமே அறியும்

என்னுள்ளிருந்து வந்த கதறல்கள்

என்னை இன்னுமதிகமாய் சோர்வாக்கியது...


எனது வலிகளுக்கு காரணமறியா

என் சொந்தங்கள் மருந்திடுவதாயெண்ணி

என் காத்திருப்புகளுக்கு எல்லையமைத்தனர்

ஆம் இதோ இன்று மீண்டுமொரு பயணம்

என் சொந்தங்களுக்காய்...........


ஆம் உனக்கான காத்திருப்பை விடுத்து

மருந்திட எத்தனித்த ஜீவனுங்களுக்காக

வலிமறைத்து எல்லைத்தாண்டி

செல்கிறேன் என்றாவதொருநாள்

என்னன்பு உனக்கு புரியுமென்ற நம்பிக்கையுடன்....



1 comment:

Unknown said...

பெண்களுக்கான மென்மையான உணர்வுகளை வலிகளுடன் விவரிக்கையில் கவிதைகளுக்கான எந்த வித அலங்காரங்களும் அங்கு தேவைப்படுவதில்லை நட்சத்திரா..