Tuesday, June 12, 2012

மாறிப்போச்சு எம்மனசு...




சில வருடங்களுக்கு முன் எழுதியது... இவ்வளவு நாட்களாக Draftல் கிடந்தது... வழக்கமானதாக இல்லாமல் ஒரு வித்தியாசமான முயற்சி....

அஞ்சாறு மாசமுன்னே
நீயாரு நானறியேன்
பொழுதெல்லாம் ஆபிசில்
கம்ப்யூட்டர் முன்னயிருந்து
வேகமாப்போர உலகத்துல
நானுஞ்சேர்ந்து
சோர்ந்து நான் போக‌யிலே..

தெம்மாங்கு பாடிக்கிட்டே
எந்த‌ம்பி எனைப்பார்த்து
மின்க‌டுதாசி வ‌ழியாவ‌ந்த‌
சேக்காளி இவ‌னென‌க்கு
ம‌ன‌சுங்கூட‌ சுத்த‌மிவ‌னுக்கு
என‌ச்சொல்லி உன்னையுந்தான்
என‌க்க‌றிமுக‌ம் செஞ்சுவ‌ச்சான்..

தனிமரமா நீயுந்தான்
கால‌நேர‌ம்
பார்க்காம‌ அப்ப‌னாத்தா
ம‌ன‌ங்குளிர‌ உம்பொறுப்பை
நீ நினைச்சு தூர‌தேச‌த்துல‌
வேலைசெஞ்ச‌...

உந்த‌னிமை நான்போக்க‌
எண்ணி என்னையுந்தான்
உன‌க்க‌ளிச்சேன் மின்க‌டுதாசி
மின்னரட்டை வ‌ழியாவே...

க‌ஷ்ட‌ம் நித்த‌ம் பார்த்த‌
ம‌னசு உம்பேச்சில்
குளிர்ந்தும்தான் போச்சு ராசா
என்னுசுரு இருக்கும்வ‌ரை
உன்னுசுராயிருக்க‌ துடிச்சுத‌ய்யா
இந்த‌ பாழாப்போன‌ ம‌னசு

எங்க‌ஷ்ட‌ம் நாஞ்சொல்ல‌
உங்க‌ஷ்ட‌ம் நீயுஞ்சொல்ல‌
உன்னாசையெல்லாம் நான‌றிய‌
உன்னையுந்தான் நேருல‌ப்பார்க்க‌
இந்த‌ம‌ன‌சு த‌விச்சுத‌ய்யா..

வ‌ந்த‌தொருநாளு உன்னாத்தா
உனைப்பார்க்க ஆசையிலதான்
உனையழைச்சா
பற‌ந்து வந்த உனைப்பார்க்க‌‌
நான்ப்பார்க்க‌ ஓடிவ‌ந்தேன்

நீப்பார்த்த மொத‌ப்பார்வை
எம்ம‌ன‌சு தாங்க‌ல‌ய்யா
எத்த‌னைதான் பேசி சிரிச்சிருந்தாலும்
உம்பார்வை என்வாய‌
ஊசி வச்சு த‌ச்சிருச்சு

நீப்பார்த்துர‌சிக்க‌ நானும்
உடுத்திவ‌ந்த‌ சேலையைத்தான்
நித்த‌ம் கையிலெடுத்தா
உந்நெனைப்புலதான்
க‌ரைஞ்சுபோது எம்ம‌ன‌சு..


2 comments:

சத்ரியன் said...

கிடப்பில் கிடந்த மனசு
வெள்ளந்தியாய் வெளிவந்திருக்கு.

நட்புடன் ஜமால் said...

Repeat the above :)