Thursday, October 4, 2012

சின்ன சின்ன சிதறல்கள்....

 
  தனிமை என்பதை நானறியேன்
உன் நினைவுகள் என்றுமே
துணையாகயிருப்பதால்...
  கசகசப்பான நெடுந்தூரப்பயணமும்
இனிமையாகிறது
உன் நினைவுகளின் துணையோடு...
  வெற்றி உனதா
இல்லை எனதா
வெற்றி யாருக்காகவும்
இருக்கட்டும்.... அது
நமதான வெற்றியாக
மாறிப்போனதை அறியாயோ
கண்மணியே....
  அனைவரும், அனைத்தும் இருந்தும்
என்னருகே நீ இல்லாத பொழுதுகள்
வெறுமையாகவே இருகிறதே என்னுயிரே...
  உன்னை வலைவீசீ தேடுகிறார்கள்
உனை சேர்ந்தவர்கள்..
அவர்களுக்கென்ன தெரியும்
நீ என்னுள்
மிக பத்திரமாயிருப்பது..
  உனக்கோ என்னைப்பற்றிய நினைவுகள்
உந்தனிமையில் மட்டுமே..
எனக்கு உன்னைப்பற்றிய நினைவுகளே
என்னை தனிமைப்படுத்துகிறதே...
  பிரிவுக்கூட பெரியதாய் தெரியவில்லை..
உன் மௌனம் மட்டுமே என்னை கொல்கிறது..
பிரிவின் காரணம் புரியாததால்...
  பிரிவு சிறியதாக தோன்றுகிறது
பெரிய உன் மௌனத்தின் முன்..

1 comment:

இளங்கோ சக்திவேல் said...

ஆஹா அருமை. இத்தனை நாள் எங்கிருந்தாய் பெண்ணே. உமது கவிதையின் எளிமை வசப்படுத்துகிறது.