Thursday, November 6, 2008

நீயும் நானும் மட்டும்....


வானிறைந்த நட்சத்திரங்களின் கீழே,
இதமான வெப்பத்தோடான ஓரிரவில்,
உன் மென் கரங்கள் எனையணைத்திருக்க,
எல்லாம் சுகமாகவேயிருக்கின்றன
உன் மென்மையான இதழ்முத்ததில்,
இதமான ஸ்பரிசத்தை உணர்கிறேன் நான்,
இந்த நிசப்தமான இரவு வானின் கீழ்
நான் பாதுக்காப்பாயிருக்க நீயெனக்கு உதவுகிறாய்

என் முன்னிருக்கும் என்னுலகம் மிகச் சரியாகவேயிருக்கிறது
இருந்தும் வேறெங்குமிருக்க விருப்பமில்லை
உன் கரம்கோர்த்து, மடிசாய்ந்து நீயும் நானும் மட்டும்
இந்த வெண் நட்சத்திரங்களின் கீழேயிருப்பதை தவிர..

எல்லாம் நிறைவாகவேயிருக்க
உன்னன்பால் நீயெனை நனைத்திருக்க
என் கால்களூடே கடந்து சென்ற அலைகளின்
குளுமை சுகத்திலே இழுத்து செல்லப்பட்டாலும்

வேறேதுவுமே சிறந்ததாயிருக்க
முடியாது இந்த மண்ணிலே....
உந்தோள் சாய்ந்து உன்கரம் பிடித்து
இந்த அலைகளூடே நடப்பதை தவிர....

24 comments:

V Ramesh said...

கலக்கலா இருக்கு கவிதை...எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதறீங்களோ வாழ்த்துகள்

Sanjai Gandhi said...

அக்கா கவிதை சூப்பர் :)

Anonymous said...

wow...... superb maria...
indha kavidhaya nenachu paarthaale nalla iruku... got good taste...
really good !!!!
i love youuuuu............

Natchathraa said...

கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரமேஷ்.....

Natchathraa said...

ரொம்ப தாங்ஸ் தம்பி!!!

Natchathraa said...

thanks for ur comment shruthi... :) :)
hmmm it is all about my dream lover... :) :)
i love u tooo :) :)

Anonymous said...

dream lover seekram neril vara vaazhthukal !!! :)

Natchathraa said...

Thanks my dear... but i told u na this is my dream lover...it is going to be only my dream... :) :)

Mahesh... said...

Superaaa irukuu Maira... Specifically.. this line "எல்லாம் நிறைவாகவேயிருக்க
உன்னன்பால் நீயெனை நனைத்திருக்க" romba... rombaa nalla irukuu... Thank you for sharing such wonderful poems...

மதுமிதா said...

உணர்வுகள் மிக மிக நன்றாக வந்திருக்கின்றன.

இன்னும் சிரத்தை எடுத்துக்கொண்டு கவிதைப்படுத்த வேண்டும்.

Natchathraa said...

Thanks for your comment Mahee... :) :)un commentum niravagaveyirukku.. :) :)

Natchathraa said...

கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி என் செல்ல அம்மா... :) :) :)

Unknown said...

Akkaaaa kalakiteenga :) :) :)
MY Wishes akka :)

Wish u ur Dream world to come true with harmony of happiness :) :)

அவன் தோளின் ஆதரவும் .....
அவன் மடியின் தாலாட்டும் .....
அவன் நேசெம்
பாசம்
நீ விழித்துக்கொண்டு காணும் கனவுகள் அனைத்தும்
கை சேர்த்து உன் இதயம் நிறைய மகிழ்ச்சி பொங்க
என் வாழ்த்துக்கள் .... :) :) :) :) :)

Natchathraa said...

//அவன் தோளின் ஆதரவும் .....
அவன் மடியின் தாலாட்டும் .....
அவன் நேசெம்
பாசம்
நீ விழித்துக்கொண்டு காணும் கனவுகள் அனைத்தும்
கை சேர்த்து உன் இதயம் நிறைய மகிழ்ச்சி பொங்க
என் வாழ்த்துக்கள்//

என்னோட கவிதைய விட உன்னோடது சூப்பராயிருக்கு நிவேக்குட்டி.. :) :)

thanks for ur comments & wishes dear... :) :)

cheena (சீனா) said...

Hi நட்ஸ்

இது நீயா - தெரியாமப் போச்சே

7 கவிதையையும் இன்றிரவு படித்து மறு மொழி போட்டுடறேன்

இப்போதைக்கு வருகைப் பதிவு மட்டும்

நல்வாழ்த்துகள்

கனவுக் காதலன் - ம்ம்ம்ம்ம்ம்ம்

Natchathraa said...

வருகை பதிவுக்கும் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.... :) :) :)

உங்கள் கருத்துகளையும், திருத்தங்களையும் விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்....

Venkata Ramanan S said...

Dat was a gudd1 :)

Kudos :)

Natchathraa said...

Thanks for ur comments Ramanan...

Unknown said...

பெண்ணின் நேசத்துக்கு முன் எந்த ஆணின் நேசமும் நிற்க முடியாது.

எந்தவிதமான கணக்குகளும், கட்டுப்பாடுகளுமற்றது பெண்ணினது அன்பு..

உன் கவிதைகளில் நேசம் வெகுவாகப் பிரதிபலிக்கிறது.

Vishnu... said...

கவிதைகள் அருமை தங்கையே ..வாழ்த்துக்களுடன்

அண்ணா ...

புதியவன் said...

//வேறேதுவுமே சிறந்ததாயிருக்க
முடியாது இந்த மண்ணிலே....
உந்தோள் சாய்ந்து உன்கரம் பிடித்து
இந்த அலைகளூடே நடப்பதை தவிர....//

ரொம்ப நல்லா இருக்கு கவிதை வரிகள்...

Natchathraa said...

மிக்க நன்றி ராஜா!!

Natchathraa said...

மிக்க நன்றி விஷ்ணு அண்ணா!!

Natchathraa said...

மிக்க நன்றி புதியவன் அவர்களே!!

ஒரு ஒரு கவிதையினையும் படித்து கருத்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றிகள் பல...