Monday, October 6, 2008

வாழ்த்துகிறேன்...

அன்பிற்கினிய நண்பனே
ஆருயின் தோழனே
இன்று பிறந்தநாள் காணும்
ஈகை குணம் கொண்டவனே
உன் பணிகளில் சிறந்திடவும்
ஊக்கமுடன் நன்மை பல செய்திடவும்
என்றும் பெரியோர்களின் ஆசியுடனும்
ஏற்றம் நிறைந்த வாழ்வினையும்
ஒரு சேரப்பெற்று
ஓங்கி உயர்ந்த பனைப்போல
ஔடதங்கள் தேவையற்ற வாழ்வில்
அஃதே நலமென வாழ இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன் உன் அன்பு தோழி...

5 comments:

புதியவன் said...

உங்கள் நண்பருக்கு
என்னுடைய வாழ்த்துக்களையும்
சொல்லிவிடுங்கள் இரண்டு முறை
சொன்னதாகச் சொல்லுங்கள் சென்ற
ஆண்டிற்கும் வரும் ஆண்டிற்கும்...

எந்த ஒரு படைப்பிற்கும் தலைப்பு
மிக அவசியமான ஒன்று...

Natchathraa said...

நிச்சயம் சொல்லுகிறேன் உங்கள் வாழ்த்துகளை...

புதியவன் said...

தலைப்பு

“வாழ்த்துகிறேன்...”

Unknown said...

என்ன மரியா ஆத்திச்சூடி வாழ்த்தா?
நீனு எழுதியதா?

Natchathraa said...

//என்ன மரியா ஆத்திச்சூடி வாழ்த்தா?
நீனு எழுதியதா?//

ஆமா அக்கா நானேதான் எழுதினேன்...ராஜனுக்காக...